சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=TOqsM3Xa3Fs
4.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருப்பழனம் - பழந்தக்கராகம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி
விடம் கண்டு இறந்த மூத்த திருநாவுக் கரசு, அப்பரின் இறை பதிகத்தால், உறங்கி எழுவாரைப்போல எழுந்து பணிந்தார். அப்பூதியாரின் வேண்டுகோளின்படி மீண்டும் அவர்தம் வீட்டிற்கு எழுந்தருளி எல்லோரையும் ஒக்க இருக்கச்செய்து அமுது செய்தருளினார். பின் சில நாட்கள் திங்களூரில் தங்கியிருந்து அப்பூதி அடிகளுடன் திருப்பழனம் சென்று பணிந்து பாடினார். அங்குப் பாடிய திருப்பதிகத்தில் அப்பூதி அடிகளின் பெருமையையும் அமைத்துப் பாடினார்.
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்! சொல்லீரே-
பல் மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான்,
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப்
பொன் மாலை மார்பன்(ன்), என புது நலம் உண்டு இகழ்வானோ?
[ 1]
கண்டகங்காள்! முண்டகங்காள்! கைதைகாள்! நெய்தல்காள
பண்டரங்க வேடத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
வண்டு உலா(அ)ம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்வண்ணம்
கொண்ட(ந்)நாள் தான் அறிவான், குறிக் கொள்ளா தொழிவானோ?
[ 2]
மனைக் காஞ்சி இளங் குருகே! மறந்தாயோ?-மத முகத்த
பனைக்கை மா உரி போர்த்தான், பலர் பாடும் பழனத்தான்,
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ, நிகழ் வண்டே?-
சுனைக்கு வளைமலர்க்கண்ணாள் சொல்-தூது ஆய்ச் சோர்வார்
[ 3]
புதியை ஆய் இனியை ஆம் பூந் தென்றல்! புறங்காடு
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான்,
மதியா தார் வேள்வி தனை மதித்திட்ட மதி கங்கை
விதியாளன், என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ?
[ 4]
மண் பொருந்தி வாழ்பவர்க்கும், மா தீர்த்த வேதியர்க்கும்,
விண் பொருந்து தேவர்க்கும், வீடு பேறு ஆய் நின்றானை;
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை, என்
கண் பொருந்தும் போழ் தத்தும், கைவிட நான் கடவேனோ?
[ 5]
Go to top
பொங்கு ஓதமால் கடலில் புறம் புறம் போய் இரை தேரும்
செங்கால் வெண் மட நாராய்! செயல் படுவது அறியேன், நான்!
அம் கோல வளை கவர்ந்தான், அணி பொழில் சூழ் பழனத்தான்,
தம் கோல நறுங்கொன்றைத்தார் அருளா தொழி வானோ?
[ 6]
துணை ஆர முயங்கிப் போய்த் துறை சேரும் மடநாராய்!
பணை ஆரவாரத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடி செய்த
இணை ஆர மார்பன்(ன்) என் எழில் நலம் உண்டு இகழ்வானோ?
[ 7]
கூவைவாய் மணி வரன்றிக் கொழித்து ஓடும் காவிரிப்பூம்-
பாவை வாய் முத்து இலங்கப் பாய்ந்து ஆடும் பழனத்தான்,
கோவைவாய் மலைமகள் கோன், கொல் ஏற்றின் கொடி ஆடைப்
பூவைகாள்! மழலைகாள்! போகாத பொழுது உளதே?
[ 8]
புள்ளிமான் பொறி அரவம், புள் உயர்த்தான் மணி நாகப்-
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ரூவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர், உலகு எல்லாம்;
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ?
[ 9]
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்,
பஞ்சிக்கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூ ஆய் நின்ற சேவடியாய்!-கோடு இயையே!
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பழனம்
1.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் மேல் கண்ணும், சடைமேல்
Tune - தக்கேசி
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.012
திருநாவுக்கரசர்
தேவாரம்
சொல் மாலை பயில்கின்ற குயில்
Tune - பழந்தக்கராகம்
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.036
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஆடினார் ஒருவர் போலும்; அலர்
Tune - திருநேரிசை
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
4.087
திருநாவுக்கரசர்
தேவாரம்
மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்
Tune - திருவிருத்தம்
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
5.035
திருநாவுக்கரசர்
தேவாரம்
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து
Tune - திருக்குறுந்தொகை
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
6.036
திருநாவுக்கரசர்
தேவாரம்
அலை ஆர் கடல் நஞ்சம்
Tune - திருத்தாண்டகம்
(திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400